கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 47 குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து பம்மம் பகுதி வரை 2.5 கி.மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ. 222 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் கடந்து 2018 ம் ஆண்டு நவம்பர் 12ல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்பு பாலமாகும் இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள் ) அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனாவை மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பாலானவை வருடங்கள் கடந்துவிட்டதாலும் பராமரிப்பு பணிகள் நடைபெறாததாலும் இந்த பாலம் தனது கம்பீரத்தை இழந்து வருகிறது.
தற்போது அதிக பாரம் ஏற்றி செல்கின்ற கனரக லாரிகளால் அவ்வப்போது பாலத்தில் சிறிய உடைப்புகளும், விரிசல்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற ரக லாரிகள் வரிசையாக பாலத்தில் நின்றன.
அப்போது பம்மம் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த பாலத்தின் மையப் பகுதியில் இரண்டு மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை, டார் உடைந்து விழுந்தது. இதனால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இரும்பு கம்பிகள் நீண்டு வெளியே தெரிகின்றன.
விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லுகின்ற போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்த்தாண்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாலத்தின் மற்ற பகுதிகளும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
இந்த பாலம் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதால், விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முற்றிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பைக்கு கார்கள் ஆட்டோ உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பாலிதீன் கீழ் பகுதி வழியாக சென்று வருகின்றன. இதனால் பாலத்தின் கீழ்புறம் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.