முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோவில் உண்டியல்கள் இம்மாதம் திறந்து எண்ணப்பட்டன.
கோவில் அறங்காவலர் குழு தலைவர்- அருள்முருகன், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்- கார்த்திக், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) செல்வி, கண்காணிப்பாளர்- ரவீந்திரன், திருக்கோவில் ஆய்வர்- செந்தில் நாயகி, சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப் பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதிகள்- மோகன், வேலாண்டி, அயல்பணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் கிடைக்கப் பெற்ற வருவாய் விவரம் :
நிரந்தர உண்டியல்கள் வருவாய் ரூ.2,47,76188, கோசாலை பராமரிப்பு வருவாய் ரூ.49,083, யானை பராமரிப்பு வருவாய் ரூ.1,19,428, ஆக மொத்தம் ரூ.2,49,44,699 பணமாகவும், தங்கம் கிராம் 1100, வெள்ளி கிராம் 24000, பித்தளை கிராம் 47000, செம்பு கிராம் 5000, தகரம் கிராம்5000, மற்றும் அயல் நாட்டு நோட்டுகள் 326 கிடைக்கப் பெற்றதாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி, தகவல்கள் அனைத்தும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டன.