யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
14-05-2024 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரின’ அவசியம் பற்றியும் தூதுவர் அதிக அக்கறை செலுத்தியதாகவும் அத்துடடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு மற்றும்கட்சி வழக்கு விடயம் தொடர்பிலும் கேட்றிந்து கொண்டார் என கலந்துரையாடலில் பங்கெடுத்த தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களிலிருந்து அறிந்து கொள்ளக்சகூடியதாக இருந்தது
ஒரு சந்தர்ப்பத்தில் தூதுவர் ஜூலி சங் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ” உங்க்ளைப் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் மிகவும் கடினமான சூழலில் தறபோது நீங்கள் உள்ளீர்கள் என்பதனை ஏற்கின்றோம் என அமெரிக்கத் தூதுவர்தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
இச் சந்திப்பில் பொது வேட்பாளர் விடயத்தில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட மூவரும் மூன்று நிலைப்பாட்டில் கணப்பட்டுள்ளனர்.
வழக்கு விடயம் பிரஸ்தாபித்தபோது அதனை தனிப் பேசுவதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிசிறதரன் பதிலளத்தார்.
இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாஏர் விடயத்தில் முன்பு சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாஸா, மைத்திரி என வாக்களித்து ஏமாற்றமே அடைந்தோம். அதனால் பொது வேட்பாளர் வேண்டும். இதனை தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் களமாகவும் பயன்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்த அதேநேரம். பொது வேட்பாளர் விடயம் பொருத்தமற்ற ஒன்று என்பதே தனது நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மௌனம் காத்தார்.
”
இதற்கு பதிலளித்த ஜூலி சங் அவர்கள்.” இதேநேரம் நில விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயம், பொறுப்புக் கூறல், மனித உரிமை போன்ற விடயங்களில் நாங்கள் பல விடயங்களை அரசிற்கு சொன்னோம் அவர்கள் செய்வதாக இல்லை. மிகவும் கடினமான சூழலில் தறபோது நீங்கள் உள்ளீர்கள் என்பதனை ஏற்கின்றோம். இருப்பினும் நாம் தொடரந்தும் அழுத்தம் கொடுப்போம் “என பதிலளித்தார்.
























