ஒடிஷா மாநிலம் பூரி தொகுதி பாஜக எம்பி சம்பித் பத்ரா, சமீபத்தில் ஒரு கருத்து கூறியிருந்தார். “பூரி ஜெகந்நாதர், மோடியின் பக்தர்” என்று அவர் சொன்னார். இதற்கு ஒடிஷா மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். “மோடி, பூரி ஜெகந்நாதரின் பக்தர் என்று சொல்வதற்குப்பதில், பூரி ஜெகந்நாதர், மோடியின் பக்தர் என்று தவறுதலாகக் கூறி விட்டேன். இதற்காக 3 நாள் விரதம் இருக்கப்போகிறேன்” என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
![மோடியை கடவுளை விட மேலானவராக ஒப்பிட்ட பாஜக எம்பி](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/poori-mp.jpg)