தோற்றம்: 12-05-1951 – மறைவு; 13-08-2026
யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்தின் முதன்மைக் குருக்கள் சிவஸ்ரீ பிறைசூடி குருக்கள் அவர்கள் தாயகத்தில் சிவபதமடைந்தார் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமும் அதிர்ச்சியும் அடைகிறோம்.
பல தசாப்தங்களாகப் பறாளைப் பதியின் பிள்ளையாரின் திருவடிகளுக்குத் தன் கைகளால் பூசை செய்து, எண்ணற்ற பக்தர்களின் வாழ்வில் ஆன்மீக ஒளியேற்றிய ஒரு உன்னதப் பெருந்தகை இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
அவரது மந்திர உச்சாடனங்களும், சாந்தமான முகமும், பக்தி நெறியும் அந்த ஆலயத்தின் ஒவ்வொரு தூணிலும் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
அன்னாரின் சேவையைப் பாராட்டி அண்மையில் சுழிபுரத்தில் நடைபெற்ற விக்ரோரியாக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவையொட்டி விசேட பாராட்டு விழாவில் சிவஸ்ரீ பிறைசூடி குருக்கள் அவர்கள் கௌரவிக்கப்பெற்றார்.
ஆன்மீகப் பணியையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த குருதேவரின் மறைவு, சைவப் பெருமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பேரிழப்பாகும்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சுழிபுரம் கிராம மக்களுக்கும், உலகெங்கும் பரந்து வாழும் பறாளை விநாயகரின் பக்தர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். குருக்கள் அவர்களின் ஆன்மா சிவபெருமானின் திருவடி நிழலில் என்றும் அழியாத பேரின்பப் பெருநிலையை (முத்தி நிலை) அடைய எல்லாம் வல்ல விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!”
கனடாவில் மேலதிகத் தொடர்புகளுக்கு: கந்தசாமி தவச்செல்வம் (மைத்துனர்- 647 708 3444)
இங்ஙனம்:
மனைவி: 011 94757730655( யாழ்ப்பாணம்)
மகள்: +33764 306 156 (பிரான்ஸ்)
கந்தசாமி தவச்செல்வம் (மைத்துனர்- 647 708 3444)
கந்தசாமி திருச்செல்வம் (மைத்துனர்- 416 400 1279)
ஶ்ரீ கணேசானந்தக் குருக்கள் (சகோதரர்)- 1613 805 9857)















