உலக வரைபடத்தை சீரமைப்பதை நோக்கமாக கொண்ட ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச்சபை, “வரைப டத்தைச் சீரமைத்தல், உலகளாவிய வரைபடப் பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் உலகின் பிராந்தியங்களுக்கு குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல்’ என்ற தீர்மானத்தை பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றியது. டோகோ நாடு முன்வைத்த தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
















