எதிர்வரும் ரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் ஸ்காபுறோ வடக்கு 23ம் வட்டாரத்தில் போட்டியிடும் திருமதி பிரவீனா சத்தியானந்தம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் ஸ்காபுறோ வடக்கு 23ம் வட்டாரத்தில் போட்டியிடும் திருமதி பிரவீனா சத்தியானந்தம் தனக்கு ஆதரவை வழங்குமாறு வாக்காளர் மத்தியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.
இவரது வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பதிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதிலும் ஈடுபட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
















