பு.கஜிந்தன்
ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று (01) சிறப்பாக இடம்பெற்றது.
வருடாந்த மகோற்சவத்தின் 14 நாள் திருவிழாவில் இன்றைய தினம் 12 திருவிழா தேர்த் திருவிழாவாகும்.
பக்தர்களஅம்பாள் தேரேறி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் தூத்துக்காவடி, பறவைக்காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரசட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
























