பு.கஜிந்தன்
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழகத்தின், திராவிடர் கழகத்தின் தலைவர் பி.வீரமணி, இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமிர்தலிங்கம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் – பண்ணாகம், வலிகாமம் – மேற்கு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் அவர்களின் உருவச்சிலைக்கு இவ்வாறு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.