(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(11-03-2025)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இன்றைய தினம் 11-03-2025 செவ்வாய்க்கிழமை இளைஞர் குழு ஒன்று மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன் தலைமையிலான இளைஞர் குழு கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.