கடந்த பல வருடங்களாக தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் வகையில் அவரது யாழ்ப்பாண பல்கலைக் கழக சகாவும் நெருங்கிய நண்பருமான மாகாண அரசின் பாராளுமன்றச் செயலாளர் லோகன் கணபதி அவர்கள் ஏற்பாடுகளை கடந்த வாரம் செய்திருந்தார்.
அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கு கொடையாளர் செல்வராஜா அவர்க்ளை முன் எற்பாடுகள் செய்த வண்ணம் அழைத்திருந்த லோகண் கணபதி அவர்களை கௌரவிக்கும் முகமாக சபை நேரத்தில் சபாநாயகரின் முன் அனுமதி பெற்றும் அவர் பற்றிய அறிமுகத்தை சிறப்பாகச் செய்த போது அங்கு அமர்ந்திருந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்த அங்கத்தவர்கள் உட்பட அனைவரும் கரகோசம் செய்து அவரைப் பாராட்டினார்கள். அதன்பின்னர் பல அமைச்சர்களுக்கு திரு செல்வராஜா அவர்களை நேரடியாக அறிமுகம் செய்த லோகன் கணபதி அவர்கள் மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அமைச்சர்கள் பலர் திரு செல்வராஜா அவர்களை மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தார்கள்.
கனடாவின் ஒன்ராறியோவின் சட்டமன்றத்திற்கு திரு.
ஐயமிட்டுண் புகழ் திரு. செல்வராஜா அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் இலங்கையில் பாதிக்கப்பட்ட அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்கள் ஆகிய இரண்டையும் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பதும் அதன் காரணமாக அவர்கள் அவுஸ்த்திரேல0ியா அரசாங்கத்தால் ORDER OF AUSTRALIA என்னும் உயர் கௌரவமும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு. செல்வராஜாவின் சிறந்த சமூக சேவையை அங்கீகரிப்பதில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற இணைந்த மாகாண முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏனைய அங்கத்தவர்கள் ஆகியோருக்கும் திரு லோகன் கணபதி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவுஸ்த்திரேலியாவின் ORDER OF AUSTRALIA என்னும் உயர் கௌரவத்தை தனது மக்கள் சேவைக்காகப் பெற்ற செல்வராஜா அவர்களின் இந்த ‘ஐயயமிட்டுன்’ மனித நேயப் பணியானது இலங்கையின் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளும் விரிவாக்கப்பெற்று அத்துடன் இந்த பகுதிகளில் மாணவர்களின் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பரீட்சைகளை நடத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கே காணப்படும் படங்களில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்களினால் திரு செல்வராஜா அவர்கள் பாராட்டப்பெறுவதையும் தொடர்ந்து மார்க்கம் நகரில் இடம்பெற்ற ஒரு சந்திப்பு நிகழ்வின் போது ‘உதயன்’ பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் லோகன் கணபதி ஆகியோருடன் ஐயமிட்டுண் புகழ் திரு. செல்வராஜா காணப்படுவதையும் பார்க்கலாம்