யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபம் மிகப் பிரமாண்டமாக 17ம் திகதி அன்று சனிக்கிழமை மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவானாது 155 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இம்முறை கொடியேற்றமானது மிகவும் பிரமாண்டமான ரீதியில் சிறப்பாக இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.
கொடியேற்றமானது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி, திருச்செபமாலையுடன் மாலை 6 மணியளவில் திருப்பலி அருட்தந்தை அமிர்தராஜ் அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது
இவ் நிகழ்வில் ஆலய பங்குத் தந்தை, பங்கு மக்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.