நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
























