நல்லாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் களுத்தில் இப்படி துண்டு கட்டி இருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்த மகா மகா திருடர்கள் .
சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிடம், ரூபாய் 4000 கோடி பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷத்தின் மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷத்தின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, முதலில் ஊவா மாகாண சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் நுழைந்தார்.
பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.
அரசியலைத் தவிர, வாழ்வில் வேறு எந்தத் தொழிலும் செய்யாத சஷேந்திர ராஜபக்ஷ, 15 வருடங்கள் போன்ற ஒரு குறுகிய காலகட்டத்தில், ரூபாய் 4000 கோடி பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்தும் ஊழல் பணப் பரிமாற்றங்கள் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் என்பதாக, இப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் பெயரில், எச்.எஸ்.பி.சி வங்கியில் 1005013081001 என்ற எண் கொண்ட வங்கிக் கணக்கு வழியாக, பல ஊழல் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரிடம், கோடிக் கணக்கு மதிப்புள்ள, BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார், யாரிஸ் வகை கார் என, ஆக நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன.
இவை அனைத்தும், மாத்தறை வித்தாரந்தெனியாவில் வசிக்கும், மனோஜ் ஏகநாயக்க என்ற, சஷேந்திர ராஜபக்ஷவிடம் பணிபுரியும் எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் இவ்வளவு வாகனங்கள் வாங்க முன் சாதாரண ஒரு வாகனம் கூட வாங்கும் பொருளாதார தர்த்தில் உள்ள ஒருவர் அல்ல.
அந்த மோட்டார் வாகனங்களை, மனோஜ் ஏகநாயக்க என்ற பெயரில், சஷீந்திர ராஜபக்ஷ பதிவு செய்திருப்பது, ஏதேனும் சட்டப் பிரச்சனை எழுந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காகவே. ஆனால் அவை அனைத்தும் இப்போது போலீஸ் விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளன.

சஷீந்திர ராஜபக்ஷவிடம், தற்போது, நுகேகொடை, நாவல வீதியில், நந்த மாவத்தையில், ரூபாய் 4000 இலட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு வீடும், நிலமும் உள்ளது.
மேலும், நுகேகொடை, பாலவத்த வீதியில், ரூபாய் 1100 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு உள்ளது.
கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில், 6.5 ‘பெர்ச்’ அளவுள்ள நிலத்தில், 4 அடுக்கு கொண்ட ஒரு ஆடம்பர வீடும் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 5500 இலட்சம் ஆகும்.
தெஹிவாலாவில் 24 பெர்ச் அளவுள்ள ஒரு நிலம் உள்ளது அதன் மதிப்பு ரூபாய் 2400 இலட்சம் ஆகும்.
நாராஹேன்பிட்டத்தில் 14 பெர்ச் அளவுள்ள ஒரு நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 2000 இலட்சம் ஆகும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லாவில் 70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு ரூபாய் 7000 லட்சம் ஆகும்.
மொனராகல, சிரிகல பாராவில், இன்னொரு சொகுசு வீடும், இடமும் உள்ளது அதன் மதிப்பு ரூபாய் 3000 இலட்சம் ஆகும்.
தெஹிவாலாவில் மேலும் 10 பெர்ச் அளவுள்ள ஒரு நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 500 இலட்சம் ஆகும். பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்திலும், மேலும் 20 பெர்ச் அளவுள்ள ஒரு நிலமும், வீடும் உள்ளது.
அதேபோல், சஷேந்திர ராஜபக்ஷவுக்கு சொந்தமான, சீதுவ பிரதேசத்தில் இருந்த ஒரு வீடும், நிலமும், ரூபாய் 3000 இலட்சத்திற்கு, சமீப காலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இவை தவிர, சஷீந்திர ராஜபக்ஷவிடம் கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளது. அதன் பராமரிப்பு பணிகளை, மனோஜ் ஏகநாயக்க என்ற நபர் நடத்துகிறார்.
சஷீந்திர ராஜபக்ஷவிடம், ஆஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார்.
தற்போது இலஞ்ச விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும், சஷேந்திர ராஜபக்ஷவின் சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே இவை. அவரிடம் இவற்றை விட அதிகமான சொத்துக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த சொத்துக்கள் அவர் பெயரிலும், அவருக்கு நெருக்கமான மற்ற நபர்களின் பெயரிலும் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. அதனால், அந்த விவரங்கள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை, தற்போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இலங்கை ராஜபக்ச ‘ராஜ்யத்தில் நான்கு ‘திருடர்கள்’ மாத்திரம் இல்லை. எண்ணிக்கையில் நாற்பதற்கு மேலாகலாம் என்பதே அநுர அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு
சிங்கள மொழியில் – ஸ்ரீ லால் பிரியந்த
























