இலங்கை அரசியல்வாதிகளில் ஒருவரும், தற்போதைய ஊவா மாகாண ஆளுனருமான
ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வி ஷஸ்னா முஸம்மில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் (Milton Keynes Council) தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்றவுள்ள குறித்த தேர்தலில் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஷஸ்னா முஸம்மில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், தொடர்ந்து அங்கு உயர் கல்வியிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது