கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவிலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோரமான விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு புதல்வர்களும் பலியாகியுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் சென்று கொண்டிருந்ததாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் வாகனம் வந்து கொண்டிருந்த போது டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
வீதியை விட்டு விலகிய டிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர்.
விபத்தில் பளை தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற சிறுவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை சற்குணம் என்பவரம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு. பலத்த காயங்களுடன் விரைந்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கொழும்பில் தான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 26ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டும் இலங்கை முழுவதும் வா