(மன்னார் நிருபர்)
(24-04-2021)
வன்னி மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோர் சற்று முன்னர் கைது கொழும்பில் வைத்து சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
றிஸாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நள்ளிரவு அவரது இல்லத்தை சுற்றிவளைத்தனர்.
அத்துடன், றிஸாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீனின் வீட்டை சி.ஜ.டியினர் சோதனையிட்டுள்ள நிலையில்,சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீனையும் கைது செய்துள்ளனர்.குறித்த கைதினை காவல்துறை உறுதி படுத்தியுள்ளது.