(11-10-2021)
வடமாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா திங்கட்கிழமையன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது