(16-10-2021)
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடி சென்று விட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த கட்டட ஒப்பந்ததார் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டார் . மாலை 6 மணியளவில் வீட்டிற்குத்திரும்பியபோது வீட்டின் முற்றத்தில் அலுமாரியின் பெட்டகத்தின் சிலபகுதிகள் சிதறிக்காணப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டிற்குள் உட்சென்று பார்த்தபோது பின்கதவு உடைக்கப்பட்டு உட்புகுந்த திருடர்கள் அனுமாரியில் வைக்கப்பட்ட நான்கு பவுன் பெறுமதியான நகைகள் மற்றும் எழுபதினாயிரம் ரூபா பணம் என்பனவும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது . இச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்