திருமலை நவம்
தமிழ்த்தேசியக் கூட்டமைபபுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (25.3.2022) இடம் பெற்றிருக்கிறது. பலமாத தவத்துக்குப் பிறகு இது இடம் பெற்றிருப்பதாக ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை தவிர்த்துவந்த ஜனாதிபதியவர்கள் தற்போது பேச்சவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்பதும் கூட்டமைப்பினரும் எந்தவித நிபந்தனையுமின்றி சென்று வந்துள்ளனர். என்பதும் இலங்கை அரசியல் களத்தில் முக்கியமான பதிவுகளாகும்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு 20 மாதங்களுக்குப் பின் இச்சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. இச்சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புக்கள் சவால்கள் விமர்சிப்புக்களுக்கு மத்தியில் இடம் பெற்றிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நீண்ட காலமாக புரையோடிப்போய் காணப்படுகிற அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் எண்ணம் ஜனாதிபதியிடம் காணப்படுமாயின் அவரிடமிருந்து அழைப்பு வரலாம் என்று கூட்டமைப்பு எதிர்பார்த்தது ஒருபுறமிருக்க கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் பல தடவைகள் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கி தரும்படி ஜனாதிபதியை கோரியிருந்த போதும் அது ஜனாதிபதியவர்களால் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இவ்வறானதொரு சூழ் நிலையில்தான் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தார்கள.; அத்தருணத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களால் விடப்பட்டிருந்தது. ஆளும் அரசாங்கத்தின் கடும் போக்கு தன்மையிலிருந்து இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமாயின் இந்தியாவின் தலையீடு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களால் அண்மையில் இந்தியப்பிதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இது தவிர கடந்த பெப்ரவரி மாதமளவில் உதியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த பெப்ரவரி (2022) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழர்களுக்கான சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் உறுதி செய்யப்படவேண்டுமாயின் அதிகாரப்பரவலாக்கம் இன்றிமையாதது என்பதை தனது விஜயத்தின்போது வலியுறத்தியிருந்தார்.
அளித்த வாக்குறதிகளிலிருந்து நடைமுறைப்படுத்தும் கடைப்பாட்டியலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக மீறியுள்ளதுடன் தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை என்ற பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி இரா. சம்பந்தன் அவர்கள் மனிதவுரிமைப் பேரவையில் அங்கம்பெறும் 47 உறுப்பு நாடுகளுக்கும் 2022 பெப்ரவரியில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இது ஒருபுறமிருக்க நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் சில மந்திரிமாரின் பதவி பறிப்பு என்பவற்றுக்குப் பின் ஏற்பட்ட அகப்புற அரசியல் நெருக்கடிகள் கூட்டமைப்பை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டிய சூழ் நிலையை ஜனாதிபதிக்கு உருவாக்கி கொடுத்திருக்கலாம்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் எஸ். ஸ்ரீதரன் இ. சாணக்கியன் சாள்ஸ் நிர்மலநாதன் தவராஜா கலையரசன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா புளட் அமைப்பின் தாலைரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்க கொண்டிருந்தனர்.
ரெலோவின் மூன்றுபாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சந்திப்பில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கமிடையிலான பேச்சு நடைபெறுவதற்கு முன் ஜனாதிபதி நல்லெண்ண சமிஞ்சையை வெளியிடவேண்டுமென்று தெரிவித்து இந்த பேச்சுவார்த்தையை அவர்கள் தவிர்த்திருந்தார்கள்.
கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் பல அபிப்பிராயபேதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது என்பது யதார்த்தம். ராஜபக்ஷக்களின் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கப்போவதில்லை எனவே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது அர்த்தமற்றது என்ற எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக விரவியிருக்கிறது.
இச்சந்திப்பில் பின்வரும் விடயங்கள்பற்றி பேசப்பட்டது என்று ஊடகங்கள் மாத்திரமன்றி கூட்டமைப்பின் பரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு கேட்டபோதும் தெரிவித்தார்கள்.
புதிய அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்.
13 ஆவது அரசியல் சீர்திருத்தம் தமிழ்ப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு. வடகிழக்கு அபவிருத்திக்கு தனியான நிதியம் மாகாணசபை தேர்தல்.
இவ்விடயங்கள் தொடர்பில் கூட்டமைபினரால் தனித்தனியாகஎடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.
சுதந்திரத்துக்குப்பின்னான காலத்தில் இலங்கை அரசாங்கங்களுடன் தமிழ் தலைவர்கள் பேசிவந்திருக்கிறார்கள். ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்கள் எல்லாமே புறக்குடத்து நீராக போனதே தவிர எந்த சாத்திய விளைவையும் அவை தரவில்லை. இவைபோலத் தான் கோத்தபாய கூட்டமைப்பு சந்திப்பு அமையக்கூடுமென்பது பலரது ஆருடம்.
ஜனாதிபதி கோத்தபாயா நினைத்திருந்தால் பொதுத்தேர்தல் முடிந்த கையுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கவேண்டும். அதன் ஆரம்ப நடவடிக்கையாக கூட்டமைப்பை அல்லது தமிழர் தரப்பை அழைத்து பேசியிருக்க வேண்டும். இதை அவர் செய்ய முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தான் சிங்கள மக்களால் தேர்ந்தடுகப்பட்ட துட்டகை முனு பரம்பரையில் வந்த தலைவன் என்ற மமதையுடன் பேரினவாதக்கதிரையில் அமர்ந்திருக்கிறார்.
இப்பொழுது பொருளாதார நெருக்கடிகள் அரசியல் சதிராட்டங்கள்அவரை நிலை குலைய வைத்திருக்கிறது. மக்கள் எப்போது ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்துபுரட்சி யொன்றை மேற்கொள்வார்களோ என்றபயமும் பீதியும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது இதற்கான முஸ்தீப்புக்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸதலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அனுரா குமார திஸநாயக்கா தலைமையிலான ஜே.வி.பியும் முன்னெடுத்து வருகிறது நிலமைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
கோத்தபாய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் மக்களின் மோசமான வாழ்க்கை பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலும் ஐக்கியமக்கள் சக்தியின் ஏற்பாட்டில் (15.3.2022) கொழும்பு காலி முகத்திடலில் மக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஜனாதிபதி செயலகத்தை முற்றகையிட முயன்றது பாரிய கவனத்தை ஈர்த்த மக்கள் புரட்சியாக பேசப்படுகிறது. இவ்வாறானதொரு நெருக்கடி நிலையில்தான், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக் இடையிலான சந்திப்பானது தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் மகால பிரச்சனைகள் தொடர்பில் நிகழ்ச்சிப்படுத்தி பேசப்பட்டிருக்கிறது.
அரசியல் தீர்வு.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போரட்டமானது தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்து ஆரம்பிக்கபட்ட விவகாரம். அதற்கு வயது 70 க்கு மேலாகிவிட்டது. தமிழ்த்தேசிய தீர்வைப் பொறுத்தவரை அது ஒரு ஆகாயத்தாமரையாகவேமாயவித்தை காட்டும் விடயமாக கண்ணுக்குப்புலப்படுவதுபோல் புலப்பட்டு பின் அது மறைந்துபோய்விடும் ஜாலவித்தையாக மாறிக்கொண்டிருப்பதை கடந்த கால வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.
நல்லாட்சி காலத்தில் அரசியல் யாப்பு அதனூடாக அரசியல்தீர்வு என்ற நம்பிக்கை கொடுக்கப்பட்டது. அடுத்த தீபாவளிக்கு தீர்வை பெற்றுவிடுவோம். வரும் பொங்கல் தினத்தில் புதிய அரசியல் சாசனத்தின்வழி பொங்கலை தமிழர்கள் கொண்டாடுவோம்ஏன்றெல்லாம் கூறப்பட்டது.இந்த வாக்குறுதிகளை மக்கள் நம்பினார்கள்.
அரசியல் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதியுடன் உரையாட முற்பட்டபோது பிளவுபடாத பிரிவுக்குஉட்படாத ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சிப் பலம் கொண்ட அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூற முற்பட்டவேளை ஜனாதிபதி குறுக்கிட்டு“அரசியல் சாசனம் தொடர்பான நிபுணர்குழு அறிக்கை விரைவில் வரவுள்ளது அந்த ஆலோசனைக்கு அமைய” என்று ஜனாதிபதி கூறவும் சம்பந்தன் ஐயா குறித்த பேச்சை முறித்துக்கொண்டு அவ்வறிக்கை வெளி வந்தபின் அதுபற்றி ஆராய்ந்து பேசுவோம்”; என்று நறுக்குத் தெறித்தாற்போல் கூறியதுடன் குறித்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த விவகாரம்பற்றி பேச முற்பட்டிருக்கிறார்.
அரசியல் சாசனம் தொடர்பில் அதிகமாக பேசப்பட்ட காலம் நல்லாட்சிக்காலம். ஆனால் அந்த முன்னெடுப்புக்கள் பொரிமாத்தோண்டடியின் கதையைப்போல் ஏமாற்றம் கண்டதுதான்; மிச்சம். சம்மந்தன் ஐயாவின் பகீதரப்பிரயத்தனங்கள் கடுமையான போராட்டங்கள் வீணாகிப்போனதுபற்றி மீண்டும் நினைத்துப்பார்ப்போமானால் ஏமாற்றந்தான் மிஞ்சி நிற்கும்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை கூட்டமைப்பினர் சந்தித்தபோது அவர் கூறிய கருத்துக்களை சம்பந்தன்போன்ற அனுபவம் கொண்ட தலைவர்கள் இலகுவாகவே புரிந்து கொள்வார்கள்.“புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் கூட்டமைப்பினராகிய நீங்கள் இணைந்துவிடாதீர்கள்.
அதை உருவாக்குவோம் உருவாக்குவோம் எனஇலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கும் இறுதியில் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். எனவே அரசியல் அமைப்புக்காக காத்திராமல் ஏனை விடயங்களை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என ஜெய்சங்கர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.அவரின் வார்த்தையில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை யாருமே புரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாது.
13 ஆவது திருத்தம்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி ஜனாதிபதியை சம்பந்தன் வலியுறுத்தியபோது அங்கு உடன் இருந்த நீதி அமைச்சர் அலிசப்ரி மற்றும் ; வெளிவவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் இதற்கு பதில் கூறுகையில் “13 ஆவது திருத்தத்தில் காணப்படும் காணி பொலீஸ் அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகிறது. ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்று சம்பந்தனின் கருத்தை மறுதலித்து கூறியபோது கோபம் கொண்ட கூட்டமைப்பின் தலைவர் மேசையில் இருமுறை அறைந்து “13 ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக அமுல்படுத்த முடியாவிட்டால் நாம் பேசி பயனில்லை எமது வழியில் நாம் பயனிப்போம் என்ற தோரணயில் தனது கோபத்தை வெளிகாட்டியுள்ளார்.
சம்பந்தரின் இந்த கோபத்தைக்கண்டு அரச தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலைய சமாளிக்க முற்பட்ட ஜனாதிபதியவர்கள் “அமுல்படுத்த முடியாது என நாம் சொல்லவில்லை அதில் உள்ள சவால்களையே குறிப்பிட்டோம். நாம் முழுமையான அதிகாரப்பகிர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோம்”; என ஜனாதிபதி அவ்வேளையில் தெரிவித்ததாக கூறப்பட்டது.
மாகாண சபை ஆரம்பித்த காலத்திலிருந்து குறிப்பாக முன்னாள் ஜனாதபதி ஜெயவர்த்தனா காலத்திலிருந்து காணி பொலீஸ் அதிகாரங்கள் தொடர்பாக ஏமாற்றுதல்களும் இழுத்தடிப்புக்களும் இடம் பெற்று வருகின்றன என்பது என்பது அறியப்பட்ட சமாச்சாரம். இவ்விரு விடயம் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் புகுத்தப்பட்டிருக்கும் விஷமத்தனமான கருத்துக்குள் பூதகரம் பெற்று காணப்படுகிறது.
வட கிழக்கு மாகாண சபை ஆரப்பித்த காலத்திலையே முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இவ்விரு அதிகாரங்களையும் பெற்றுத்தரும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தபோதும் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனா அதற்கு உடன்படவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின்பும் இதுபற்றிபல தடவைகள் பேசப்பட்டபோதும் தென்னிலங்கையி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
13 அப்பால் சென்று அதிகாரப்பகிர்வினை வழங்குவேன்” என ஐக்கிய நாடுகள் சபைக்கும் இந்தியாவுக்கும் வாக்குறதி அளித்த முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிpரதமருமாகிய மஹிந்தராஜபக்ஷவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் மக்களுக்கு பிரத்தியேக அரசியல் பிரச்சனைகள் காணப்படுகிறதென்றோ அல்லது அவர்களுக்கு தனித்துவமான பிரச்சனைகள் இருப்பதாக எப்பொழும் ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி அவர்கள்‘தான் சிங்களவரால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டவர் அவர்களின் நலனும் விருப்பு வெறுப்புக்களுமே எனக்கு முக்கியமானது’ என்று கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத:தவாரா ? என்ற கேள்விக்கு யாராலும் தற்போது விடை இறுக்க முடியாது. அவ்வாறு நடக்குமானால் அது உலக சரித்திரத்தின் ஒரு புதிய அத்தியாயமாகவே எழுதப்படவேண்டும் என்பதே சில தமிழ் தலைமைகளின் அபிப்பிராயமாக காணப்படுகிறது.
அரசியல் கைதிகள் விடுதலை.
விடுதலை செய்யப்படாமலும் விசாரணை செய்யப்படாமலும் பல வருடங்களாக சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் தொடர்ப்பில் காரசாரமக இருதரப்பினம் பேசியுள்ளனர். 48 அரசியல் காதிகளுக்கு மேல் 10 வருடங்களுக்குமேல் சிறையில் வாடுவதையும் இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்துவைக்கப் பட்டுள்ளதையும் இப்பேச்சு வார்த்தையின் போது கூட்டமைப்பினர் ஜனதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்;. இதற்கு பதில் அளித்த ஜனாதிபதியவர்கள் 48 கைதிகள் விடயத்தை ஆராய்ந்து சாதகமான முடிவொன்றை விரைவில் தெரிவிப்பதாகவும் . ஏனைய கைதிகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்கடி ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு ஆணைபிறப்பித்துள்ளார்.
இந்த அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் கடந்த நல்லாட்சிக்காலத்தில் அதிகமாக பேசப்பட்ட விவகாரம் மாத்திரமல்ல பல போராட்டங்களும் நடாத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பிலிருந்த மஹிந்த அரசாங்கத்துடனும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஸ்ரீசேன அரசாங்கத்திடமும் தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பல பேச்சுவாhத்தைகளை நடத்தியபோதும் தீர்வு காணப்படவில்லை.
குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை குறித்து கூட்டமைப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும் அவசரம் அவசரமாககைதிகள் தொடர்பான பட்டியல் ஒன்றை தயாரித்து 2020 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் பிரதமர் மஹிந்தவிடம் கையத்திருந்தனர்ஃபட்டியலை ஏற்றுக்கொண்ட பிரதமர் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன்பேசி நல்லதொரு முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மறுவாரமே குத்துக்கரணம் அடித்து அரசியல் கைதிகளில் பலர் விடுவிக்க முடியாத குற்றங்களுடன் தொடர்பு பட்டு காணப்படுவதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார்.இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
அதே நேரம் அதே காலப்பகுதியில் கொலைக்குற்றித்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கா என்பவரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பாவித்து விடுதலை செய்த சம்பவமும் இடம் பெ;றுள்ளது பின்னாளில் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம் பெற்றன. 3000 இராணுவத்தை கொன்றவன் நான் என்று பகிரங்கமாக தெரிவித்த கிழக்குவாதி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்ட கௌரவம் இந்நாட்டில் இடம் பெற்றுள்ளது.ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைய நல்லெண்ண சமிஞ்சையாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படு வார்களேயானால் அதுவே தமிழர் மனங்களை வெல்லும் முதல் உபாய பொறி முறையாகவும் ஆகலாம்.ஆனால் அது நடக்குமா? ஏன்பதை பொறுத்திருந்தே பாhக்கவேண்டும். மிருசுவிலில் தமிழ் மக்களை படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட சிங்களப்படை அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பாவித்து மன்னிப்பு வழங்கியவர் திருகோணமலை குமாரபுரத்தில் 1996 ஆம் ஆண்டு அப்பாவி பொதுமக்கள் 24 பேரை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 இராணுவ வீரரர்களும் அனைத்து குறறச்சாட்டுக்களிலுமிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; இந்த நிலையில் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படுமாயின் அதுவே பாரிய நல்லிணக்கமாக மாற இடமுண்டு
நில அபகரிப்புக்கள்.
தமிழ் மக்களின் வடகிழக்கு இனப்பரம்பலை நாசம் செய்யும் அரசாங்கத்தின் இன்னொரு நீசத்தனமான செயல்தான் நில அபகரிப்புக்களாகும் . இது நேற்று அன்று ஆரம்பிக்கப்பட ஒன்றல்ல சுதந்திர கொடி ஏற்றப்பட்ட காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பாஷிசமாகும். யுத்தத்தின்பின் இலங்கை அரசாங்கமானது. வட கிழக்கிலுள்ள காணிகளை ஆக்கிரமிப்பு செய்துவரும் அடாவடித்தனங்களை கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடத் மிக விபரமாக எடுத்துக்கட்டியுள்ளனர்.
இந்த விடயத்தை உலகம் அறியச் செய்யவேண்டுமென்பதற்காக காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த (24.2.2022) தேதியன்று ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. வட கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
வனவிலங்கு பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, பூஜா பூமித்திட்டம் உல்லாசத்துறை அபிவிருத்தி விகாரை விஸ்தரிப்பு இராணுவ முகாம் விஸ்தரிப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்கள்அபகரிப்பு தொடர்பாக கூட்டமைப்பினர் வரிவாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
கிழக்கில்இராணுவம் ஒரு பக்கம் மறுபக்கம் தொல்பொருள் திணைக்களம,; வனவிலங்கு திணைக்கள் இன்னொரு பக்கமாகவும் காணி சூறையாடல்களை மேற்கொண்டு வருகிறார்கள். என்று கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறவும் ஜனாதிபதி ஆச்சரியப்பட்டவராக “இராணுவத்தினர் அபகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என வினவியதாகவும் வயல் நிலங்களையும் வணக்க தலங்களையும் ஆக்கிரமிப்பது ஏற்க முடியாத நடைமுறை”என ஜனாதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த அறியாமைத்தனத்தை தமிழ் தரப்பினர் ஏற்றுக்கொள்கிறார்களோ என்னவோ கிழக்கில் இராணுவத்தாலும் தொல்பொருள் திணைக்களத்தாலும் வன பரிபாலன திணைக்களத்தாலும் கபளீகரம் செய்யப்பட்ட ஏராளமான நிலக் கொள்ளை நடந்திருக்கிறது என்பது ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கிறது என்பது ஒரு பொருத்தமான பதிலாக இருக்க முடியாது. உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு செந்தமான ஏராளமான நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் 6000 வருடம் பழமை வாய்ந்த கன்னியா வெந்நீரூற்று பறிக்கப்பட்டிருப்பது.
வடகிழக்கு அபிவிருத்தி நிதியம்.
கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதியவர்கள் “வட கிழக்குக்கான அபிவிருத்தி நிதியம் ஒன்றை உருவாக்கி புலம் பெயர் சமூகத்தின் நிதியை நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம்” என்ற கருத்தை ஜனாதிபதி கூட்டமைபிபினரிடம் தெரிவித்துனள்ளார். இது வரவேற்க ஆலோசனை மாத்திரமல்ல ஜனாதிபதியின் மனமாற்றத்தை எடுத்துகாட்டுவதாக அமைகிறது. இந்த செய்தியை அல்லது ஆலோசனையை ஜனாதிபதியவர்கள் திறந்த மனதுடன் கூறினாரா? அல்லது நல்ல மனோபாவத்துடன் தெரிவிதாரா? என்பது ஒருபுறமிருக்க குறித்த நிதியம் தொடர்பாக இருவிடயங்களை தெளிவாக பரிந்து கொள்ளவேண்டும்.
புலம் பெயர் சமூகத்தின் உதவியை எப்படி எவ்விதம் பெறுவது என்பது ஒரு சங்கடத்துக்கிய கேள்வி.
விடுதலைப்புலிகளுக்கும் நாட்டில் செயல்பட்டுவரும் பிரிவினைவாதிகளுக்கும் புலம் பெயர் சமூகத்தவர் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் எனக்கூறி 2014 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் புலிகள் உட்பட் 16 அமைப்புக்களையும் அதோடு தொடர்புடைய 424 புலம் பெயர் தமிழர்களையும் தடை செய்த நிலமை இன்னும் மாறிப்போகவில்லை. இது ஒருபுறமிருக்க கடந்த 2021 ஆம் ஆண்டு இதேமாதமளவில் பெப்ரவரி இலங்கை அரசாங்கம் 7 புலம் பெயர் அமைப்புக்களை மீண்டும் தடை செய்ததுடன் 388 தனிநபர்களை கறுப்புபட்டியலில் சேர்த்து 2016.37 அதிவிஷேட வர்த்தமானியையும் வெளியிட்டிருந்தது. கூட்டமைப்பினுடைய பேச்சுவாhத்தைக்குப்பின் ஜனாதிபதி அவர்கள் புலம் பெயர் தமிழர்கள் அச்சமின்றிவரலாம் என்று சாதகமான சமிஞ்சையை காட்டியுள்ளார். இது நடைபெறுமாயின் புதியதொரு பயணத்தை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது என்று பெருமைப்பட இடமுண்டு.
இந்த நிதியம் தொடர்பாக இன்னொரு செய்தியையும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நல்லாட்சி அரசு காலத்தில் பிரதமர் ரணில் விக்கிமசிங்க அவர்கள் 2016 ஆம் ஆண்டளவில் யுத்த பாதிப்பை பெரிதும் எதிர் கொண்ட வடகிழக்கில் இவ்வருட் விஷேட நிதியமொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் அதன்முடிவு எவ்வாறு இருந்தது என்பது நாடே அறியும். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் முதல் அமைச்சர் நிதியமொன்றை அமைக்க பகீதரப்பிரயத்தனம் செய்தார்.அந்த ஆலோசனைக்கு அரசு அனுமதி வழங்க ஆர்வம் காட்டவில்லை இனவாத குரோதத்துடன் பேசியது. வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் எதையுமே சாதிக்கவில்லை.
இந்த சம்பவங்கள் செய்திகளின் பின்னணியில்தான்; அண்மையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளது.‘தான் கூட்டமைப்புக்கு வழங்கிய ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும் அதுகுறித்து நம்பிக்கை கொள்ளும்படி”’ ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஊடாக கூட்டமைப்புக்கு செய்தி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் சூழ் நிலையை உருவாக்கக்கூடிய வல்லமை ஜனாதிபதி தன்னிடம் உண்டு என்பதை அவர் நிரூபிக்கவேண்டும். அது நடைபெறுமாயின் இலங்கையில் புதிய அத்தியாயமொன்று மலர வாய்ப்புண்டு