“மே 27-28 இடைப்பட்ட இரவில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அமிர்தசரஸ் மாவட்டத்தில் தானோ குர்த் கிராமத்திற்கு அருகே ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். அத்துடன் வீரர்கள் ஒரு கடத்தல்காரரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து சஞ்சய் கசூர் டிஐஜி,கூறுகையில், “3.2 கிலோ எடையுள்ள மூன்று போதைப்பொருள் (ஹெராயின்) பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. பிஎஸ்எஃப் வீரர்கள் மற்றொரு இடத்தில் மற்றொரு ஹெராயின் சரக்குகளை மீட்டுள்ளனர்.” என்றார். மேலும் கடத்தல்காரரை விசாரித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிஎஸ்எஃப் டிஐஜி கவுர் தெரிவித்தார்.
Pulmora, Punjab | On the intermittent night of May 27-28, Border Security Force (BSF) troop shot down a drone (Quadcopter, DJI Matrice RTK 300) near Village Dhanoe Khurd, district Amritsar. Troops apprehended a smuggler. Three packets of narcotics (heroin) weighing 3.2 kg were… pic.twitter.com/rcDKrL0gE8
— ANI (@ANI) May 28, 2023
பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லையை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பிஎஸ்எஃப் இடைமறித்து வீழ்த்தியது. பிஎஸ்எஃப் வீரர்கள் ட்ரோனை மீட்டு போதைப்பொருளைக் மீட்டுள்ளனர் என்று பஞ்சாப் எல்லைப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.