(இன்று 83 வது பிறந்த நாள்)
இன்று (அக் 27) 82 வயதை பூர்த்தி செய்யும் நடிகர் சிவகுமார், கோயமுத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர் இவர் கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவருடைய மகன்கள் ஆவர்.
நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் முன்னணியிலும், ஆதரவாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் (1965) திரைப்படத்தில் அறிமுகமானார். தொழிலில் நுழைந்ததால் பழனிச்சாமி சிவகுமார் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த படம் 19 ஜூன் 1965 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் திறமையான நடிகருக்கான கதவு திறந்தது. இவர் அனைத்து வகைகளிலும் எந்த பாத்திரத்தையும் நேர்த்தியுடன் கொண்டு செல்ல முடியும்.
சிவகுமார் நடிப்பின் திறன்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. நடிப்பிற்கான இவரது அர்ப்பணிப்பு இவருடைய குறிப்பிடத்தக்க திரைப்படங்களான சரஸ்வதி சபதம் (1966), கந்தன் கருணை (1967), திருமால் பெருமை (1968), உயர்ந்த மனிதன் (1968) போன்றவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டதாகும். உயர்ந்த மனிதனில் நடிகர் திலகத்தின் மகனாக அப்பாவி இளைஞனாக அற்புதமாக நடித்து இருந்தார்.
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் வெற்றி பெற்ற ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), மிகவும் பிரபலமான கே பாலசந்தரின் சிந்து பைரவி (1985) திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது 100 வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), வண்டிச்சக்கரம் (1980) ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (தெற்கு) வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது -(2007)ஆம் ஆண்டில் பெற்றார். இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அவன் அவள் அது (1980), அக்னி சாட்சி (1982) ஆகிய திரைப்படங்களுக்குப் பெற்றார்.
1977 கால கட்டத்தில் இவர் நடித்த அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, பத்திரகாளி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. மூன்று படங்களுமே வெள்ளிவிழா கணடன. இதனால் அவர் மார்க்கெட் வெகுவாக உயர்ந்தது. இதை குறிப்பிட்டு அவரைப் பாராட்டிய கமல்ஹாசன், நாங்கள் எல்லாம் சகலகலாவல்லவர்கள் அல்ல. இவர் (சிவகுமார்) தான் சைலன்ட் சகலகலாவல்லவன் என்று புகழ்ந்தார். ஏனெனில் தொடர்ச்சியாக 3 வெள்ளி விழா படங்களை கொடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
இவர் மூன்று தலைமுறைகளில், எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரசினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு கணேசன், கார்த்திக், மோகன், அர்ஜுன் சர்ஜா, அஜித் குமார், விஜய், விக்ரம், சூர்யா (மகன்) உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ராதிகாவுடன் இணைந்து சித்தி, அண்ணாமலை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
2012 ஆம் ஆண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெயா தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர் விருதை சிவகுமாருக்கு வழங்கி கௌரவித்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகிற்கு இவர் செய்த பாராட்டத்தக்க பங்களிப்புக்காக இவரை கௌரவிப்பதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டது.
சமீபத்திய காலங்களில், இந்து இறையியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தனது கருத்தைத் தெரிவித்த இவர் பொதுப் பேச்சில் இறங்கினார். இவருடைய சரளமான பேச்சுகளுக்காக பாராட்டப்பட்டார். கலைஞரின் பராசக்தி உள்ளிட்ட படங்களின் வசனங்களை அப்படியே மனப்பாடமாக மேடைகளில் பேசுவதில் வல்லவர், சிவகுமார்.
கலைஞர் கருணாநிதி மீது பெரும் பற்று கொண்ட சிவகுமார், கலைஞரின் வசனத்தில் பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் ஆகிய வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
27-10-41ல் சிவகுமார் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் இலட்சுமி குமாரி என்பவரை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகர்கள் சூர்யா, கார்த்திக் என இரண்டு மகன்களும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். பிருந்தா ஒரு பின்னணி பாடகியாவார்]. சிவகுமாரின் மூத்த மருமகள் ஜோதிகா ஒரு திரைப்பட நடிகையாவார்.[7]
கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட சிவகுமார், குறுகிய காலத்தில் கம்பராமாயணப் பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.
சிவகுமார் மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் தெற்கில் பெற்றவர். இரண்டு முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர் .
பிலிம்பேர் விருதுகள் தெற்கு
1979 – சிறந்த நடிகர் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி– (தமிழில்)
1980 – சிறந்த நடிகர் – வண்டிச்சக்கரம் – (தமிழில்)
2007 – பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
1979 – சிறந்த நடிகர் விருது – அவன் அவள் அது
1982 – சிறந்த நடிகர் விருது – அக்னி சாட்சி
அண்ணா நூற்றாண்டு நூலகம்
2012 – வாழ்நாள் சாதனையாளர் விருது
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்
2015 – நார்வே தமிழ்த் திரைப்பட விழா—கலைச்சிகரம் விருது
விஜய் விருதுகள்
2018 – தமிழ் சினிமாவுக்கு பங்களித்ததற்காக விஜய் விருது
எழுதிய நூல்கள்
இது ராஜபாட்டை அல்ல
கம்பன் என் காதலன்
டைரி(1945-1975)
2015ல் இவருடைய மருமகள் ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே படத்தில் குடியரசுத் தலைவராக பின்னணிக்கு குரல் கொடுத்தவர், சிவகுமார் தான். சினிமா உலகில் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவரும் சிவகுமார் தான். தன் பிள்ளைகளையும் (சூர்யா, கார்த்தி) அப்படியே ஆளாக்கி வளர்த்தது குறிப்பிடத் தக்கது.