2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 04-01-2024 இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.