முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும்வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்குஎடுத்தார். அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதிஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்கு எதிராகஅமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை யார் விசாரிப்பதுஎன்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டார்.