இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 7,366 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 194 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 7,560 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் தோற்றம் இடம்பெற்ற போது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மரணங்களே சம்பவித்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் 22ம் திகதி சம்பவித்த மரணங்களில், மொத்தம் 194 பேரில், 91 பேர் ஆண்கள், 103 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 145 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.