(மன்னார் நிருபர்)
(23-8-2021)
கொரோனா முடக்க நிலை மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை (23) மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
நகர மத்திய பகுதி வர்த்தக நிலையங்கள் உட்பட போக்கு வரத்து சேவைகள் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் தேவை கருதி ஒரு சில நடாமாடும் வியாபார சேவைகளுக்கு மன்னார் மாவட்டதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் நகர் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் இன்றைய தினம் காலை தொடக்கம் மதியம் வரை சேவைகள் இடம் பெற்றது.
அத்துடன் விவசாய செயற்பாடுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளும் மன்னார் மாவட்டத்தில் சாதாரண அளவில் இடம் பெற்றுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.