(01-01-2022)
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்திய நிலையில், எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பீற்றர் இளஞ்செழியன் மீது மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்று முன்தினம் (30) கைது செய்யப்பட்டு நேற்று (31) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.