அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ., முயற்சி செய்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர். இந்த காணொளியை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளிச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை.
பா.ஜ. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.