தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 3,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி, 6.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2,035 ரூபாய் 1000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.07 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2,055 ரூபாய் 1000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை 29, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஜூலை 29, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























