பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமது கட்சியானது தமிழ் தேசியம் சாராத தேசியக் கட்சியாக செயற்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் 11ம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பிரபல வர்த்தகர் அருள் ஜெயந்திரனை செயலாளர் நாயகமாகக் கொண்டு,
456/1 வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்புறமாக குறித்த அலுவலகம் இன்று முற்பகல் ஓய்வுனிலை உதவிக் கல்விப்பணிபாளர் (ஆரம்பனிலை)றூபா உதயரட்ணத்தால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசியல் ரீதியில் தனது மக்கள் பணியை முன்னெடுத்துவரும் குறித்த கட்சியின் செயளாளர் நாயகமான அருள் ஜெயந்திரனை தலைமையாகக் கொண்டு, செயற்பட்டுவரும் நிலையில், இன்று குறித்த மக்கள் தொடர்பாடலுக்காக தலைமை அலுவலகம் திறந்துவைக்கப்பது.
இதன்போது, தமிழ் பரப்பில் இருக்கும் பல்வேறு கட்சிகளுக்குள் முற்றிலும் மாறுபட்ட நோக்குடன், தமிழ் தேசியம் சாராத ஒரு தேசியக் கட்சியாக “இலங்கையை உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடாக்குவோம்” என்ற இலக்குடன், அனைவருக்கும் சம உரிமை, ஜனநாயகமே முன்னுரிமை என்றவாறு தனது மக்கள் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
























