இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது நேற்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 499 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 501 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில், ஒருவர் இன்றும் ஏனைய மூவரும் நேற்றும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
494ஆவது மரணம்
தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை மாவட்ட வைத்தியசாலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் கொவிட் நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
495ஆவது மரணம்
கொழும்பு 09 (தெமட்டகொடை) பிரதேசத்தைச் சேர்ந்த, … வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, புற்றுநோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
496ஆவது மரணம்
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு மற்றும் இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
497ஆவது மரணம்
பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சிறுநீரக தொற்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
500வது மரணம் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.