(16-09-2021)
இலங்கை பிரதமர் மதிந்தாவின் புதல்வர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ 16ம் திகதி வியாழக்கிழமை மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார்.
கைதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் கைதிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததுடன் அவை தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தனிபட்ட ரீதியில் தானே முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.