யாஃகொக்ககுவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலையில் திறன் வகுப்பறைய திறப்புவிழா 15.11.2021 (திங்கட்கிழமை) நடைபெற்றது. திறன் வகுப்பறைக்கான திறன் பலகையினை பாடசாலையின் பழைய மாணவியும், ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய திருமதி.செல்வநாயகி மகாலிங்கம் அவர்களின் பங்களிப்புடனும் இரட்ணம் Fundation நிறுவனத்தின் (திறன்பலகை) அனுசரனையுடனும் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
இதனை வழங்கியமைக்காக பாடசாலை அதிபரினால் மனப்பூர்வமான நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பழைய மாணவனும், பிரபல தொழிலதிபருமான திரு.மாசிலாமணி அருளேந்திரன் (லண்டன்) அவர்களால் பின்தங்கிய பாடசாலைகளுக்கு இரட்ணம் Fundation வழங்கி வருகின்ற திறன் வகுப்பறைகள் மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழச்சிகரமான கற்றல், கற்பித்தல்களை மேற்கொண்டு உச்சப் பயன்பாட்டை அடைந்து கொள்ளக்கூடியதாக அமையும் என்பதை சுட்டிக்காட்டியதுடன் இரட்ணம் நிறுவனத்திற்கும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளரும் IMOH இணைப்பாளருமாகிய திரு.கிருஸ்ணகுமார் அவர்களால் இவ்வாறான பின்தங்கிய பாடசாலைக்கு இரட்ணம் Fundation நிறுவனத்தால் வழங்கப்பட்ட திறன் பலகை ஊடாக மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பட்டை உயரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியினை தாம் வழங்கத் தயாராக இருப்பதோடு நிகழ்வு ஒழுங்கமைப்பையும் பாராட்டினார்.
மேலும் திறன் வகுப்பறையை அமைப்பதற்கு புலம்பெயர் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கும்; உதவிகளுக்கும் பாடசாலை பழைய மாணவ சங்க செயலாளரினாலும் பாடசாலை அதிபரினாலும் வலயக்கல்வி அதிகாரிகளாலும் புலம்பெயர் பழைய மாணவர் சங்க தொடர்பாடலுமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்களாலும் மனப்பூர்வமான பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
திரு.த.மனோகரன்
அதிபர்