இலங்கையின் திருகோணலையில் தற்போது இந்திய அரசின் துணை நிறுவனமான LIOC என்ற எரிபொருள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எரிபொருள் குதங்கள், அதே நிறுவனத்துக்கு மேலும் 50வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில இதனை தொிவித்துள்ளார்.
அதேநேரம் 21 எரிபொருள் குதங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளன. எஞ்சியுள்ள 61 எரிபொருள் குதங்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “ட்ரின்கோ பெற்றோலியம் டேனிமினல் லிமிடெட்” என்ற நிறுவனத்தினால் பராமரிக்கப்படவுள்ளன.
இந்த நிறுவனத்தில் 51 வீதப் பங்குகளை இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனமும், 49 வீதப் பங்கை இந்திய எரிபொருள் நிறுவனமும் கொண்டிருக்கும் என்றும் இலங்கையின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.