சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார்.
குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, அவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் கலாச்சாரங்களும் பாரம்பரியங்களும் அழிவற்று வரும் நிலையில், வெளிநாட்டு நபர்களே தமிழர்களின் பாரம்பரியத்தின் மகத்துவத்தை அறிந்து செயற்படுவது என்பது தமிழருக்கு கிடைத்த ஒரு பலமாக கருதப்படுகிறது.
























