விசேடகல்வி தேவை உடைய மாணவர்களுக்கான கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு உட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் இருக்கைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்கிவிற்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜெயராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.