கடந்த 12-01-2024 அன்று கனடாவின் ஒன்றியோ மாகாண அரசின் பாராளுமன்றமான “குயின்ஸ்பார்க்’ வளாகத்தில் எம்பிபியும் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் ஏற்பாடு செய்த ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா சிறப்பான நடைபெற்றது.
இந்த விழாவில் அழைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான விருந்தினர்களுடன் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். எம்பிபியும் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் அவர்களின் அழைப்பின்பேரில் மாகாண அமைச்சர் றேமண்ட் சோ. எம்பிபி அரிஸ் பாபிகியன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். தமிழர் சமூகத்தின் சார்பில் கலைஞர்கள். அமைப்புக்களின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் செய்தியாளர்கள் ஆகியோரும் அழைக்கப்பெற்றனர்.

































