ஒரு குழப்பவாதியாகவும் இனவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு வரும் இலங்கை அரசியல்வாதியும், அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை இந்தியா வழங்கும் விடயத்தில் தனது ஆதரைவைக் காட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்தியா அல்லது வேறு நாடுகள் மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்தாலும் அதில் பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “அதற்கான அனுமதியை கடந்த தேர்தலில் 69 லட்சம் மக்கள் வழங்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு, அரசியல்வாதிகளை தப்பிக்க வைக்கும் வகையில் கருத்துரைத்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனியார் துறை அல்லது வேறு தரப்புடன் இணைந்து மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் குழப்பவாதியான அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் அந்த விவகாரத்தை நியாயப்படுததியுள்ளார்.