பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வு.
(மன்னார் நிருபர்)
(16-02-2021)
-மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்றைய தினம் செய்வாய்க்கிழமை (16) இடம் பெற்றுள்ளது.
நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் எம். ஸ்ரீஸ்கந்த குமார் தலைமையில்,நானாட்டான் பிரதேசச் செயலகத்திலும், மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாலை 2.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்திலும் இடம் பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் குறித்த அபிவிரு;ததிக் குழு கூட்டம் இடம் பெற்றது.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச ரீதியாக மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அதே நேரத்தில் ஆசிரியர் பற்றாக்புறை, கட்டுக்கரை குளம் அதை அண்டிய நீரேந்து பகுதிகளை விருத்தி செய்தல், மேய்ச்சல் தரைகளை அபிவிருத்தி செய்தல், வீட்டுத்திட்டம், சட்ட விரோத மண் அகழ்வு சம்பந்தமாகவும், உள்ளக வீதி அபிவிருததி, மன்னார் நகரில் உள்ள முக்கி பிரச்சினைகள், சட்ட விரோத மண் அகழ்வு அனுமதி பத்திரங்களை உடனடியாக இரத்து செய்தல் ,தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, பல்வேறு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டுள்ளது.
மேலும் சமூர்த்தி உற்பட அவ்விடையம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் நானாட்டன் மற்றும் மன்னார் பிரதேச மக்களின் தொடர் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காணி சம்பந்தமான விடயங்களுடன் இணைந்த பொது அமைப்புக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேச சபை,நகர சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் , திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(நானாட்டான்)
(மன்னார்)