இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 11 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 709 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 11 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 720 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர்களளில் 3 பேர் நேற்று செவ்வாய்க்கிழமையும் 7 பேர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவரும், மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்களுக்கு மேலதிகமாக எமக்குக் கிடைத்துள்ள விபரங்களின் படி தென்னிலங்கையிலேயே அதிகளவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.
இந்த வகையில் இலங்கையில் நிகழ்ந்துள்ள 719ஆவது மரணம் குருணாகல் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ; கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக் நோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு கடைசியாக நிகழ்ந்துள்ள 720ஆவது மரணம் வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எத்தனை மரணங்கள் சம்பவித்துள்ளன என்பதை பின்னரே அறியத்தர முடியும்.