(மன்னார் நிருபர்)
(07-07-2021)
மனித நேய பல அமைப்புக்களின் ஆலோசகரான மன்னார் பேசாலையைச் சேர்ந்த திருமதி ஏ.இ.றெபேக்கா மிராண்டா அண்மையில் மன்னார் நீதவான் முன்னிலையில் தமிழ்-ஆங்கில மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.
இவர் யு.என்.நிறுவனங்களில் 10 வருடங்களுக்கு மேலாகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் ஆங்கில மொழி மூலம் இளமானி பட்டத்தை வேதியியலிலும்,(BSC) முதுமானி பட்டத்தை மனித அபிவிருத்தித் துறையிலும் (MSC) மற்றும் முதுகலைப் பட்டத்தை சமூக சேவைகள் துறையிலும் (MSW) பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.