எந்தவொரு நபரும் வங்குரோத்து நிலையடைந்து விட்டதாக தாக்கல் செய்தால் அவர்களுக்கு எதுவும் நடக்காது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வேலைவாய்ப்பை நிறுத்துவதை சட்டம் தடை செய்கிறது. ஓருவர் வங்குரோத்து நிலையை தாக்கல் செய்ததால், அவர் ஒரு புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது புதிய வேலையைத் தேடும்போது அந்த வேலை கிடைக்காமல் போகலாம். அந்த விடயத்தில் பல தனியார் நிறுவனங்களில் நிலைமை அவ்வளவு உதவும் வகையில் இல்லை. ஆனால் வங்குரோத்து நிலையைத் தாக்கல் செய்வதால் ஒருவர் வேலைக்கு அல்லது எதற்கும் தகுதியற்றவர் என்று அர்த்தமல்ல. ஒருவர் குறிப்பிட்ட பதவிக்கான தகுதியைக் கொண்டிருந்தால், நிறுவனம் அந்த நபரை வேலைக்கு அவசியம் அமர்த்த வேண்டும்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில், பதவியில் இருக்கும் ஒருவர் வங்குரோத்து நிலையை அல்லது நுகர்வோர் திட்டத்தை தாக்கல் செய்திருந்தால் நிறுவனம் புதிய பணியாளரை நியமிக்காது. அது சிலரின் மனநிலை மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். ஆனால் ஒருவர் வங்குரோத்து நிலையை தாக்கல் செய்திருந்தால் வேலைக்கு தகுதியற்றவர் என்று எந்த சட்டமும் கூறவில்லை. வேலைக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு, குறித்த ஒருவர், அந்த வேலைக்கு தகுதியானவர் என்றால் அந்த வேலையைப் பெறுவார். வங்குரோத்து நிலையை தாக்கல் செய்த ஒருவரை பணிக்கு அமர்த்துவதில் பெரும்பாலான நிறுவனங்கள் பின் நிற்பதில்லை அவர்கள் அந்த வேலைக்கான திறன்களை மட்டுமே விரும்புகிறார்கள், குறித்த வேலைக்கு விண்ணப்பித்த ஒருவருக்கு அதற்குரிய தகுதிகள் இருந்தால் அவருக்கே அந்த வேலை கிடைக்கும்.
நுகர்வோர் திட்டத்தை தாக்கல் செயத பின்னர் பிறகு கடன் மதிப்பெண்ணில் எந்த விளைவும் ஏற்படுமா?
ஆம், வங்குரோத்து நிலை அல்லது நுகர்வோர் திட்டத்தை தாக்கல் செய்த பிறகு, அது எந்தவொரு தனி நபரின் கடன் மதிப்பையும் பாதிக்கும். கடன் மதிப்பு அறிக்கை அவருக்கு எதிர்மறையாக செல்லலாம். ஏனெனில் வங்குரோத்து அல்லது நுகர்வோர் திட்டத்தை தாக்கல் செய்வது என்பது குறிப்பிட்ட ஒருவரிடம் பணம் இல்லை என்று, அவர் வங்கியிடம் கூறுகிறார். அதனால் தான் அவர் நுகர்வோர் திட்டத்தை தாக்கல் செய்கின்றார். இதன் அர்த்தம் என்னவென்றால், நுகர்வோர் கடன் தொகையையோ அல்லது எதனையோ மீளச் செலுத்த முடியாது. எனவே, கடன் மதிப்பு அறிக்கை தானாகவே எதிர்மறையாகச் செல்லலாம்.
நீண்டகால முன்னோக்கு பற்றி சிந்தியுங்கள்
கடன் மதிப்பு அறிக்கை என்பது தற்காலிகமானது, மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒருவர் நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பெறலாம். ஆனால் யாராவது ஒருவர் கடன் தொகையை மீளச் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அவர்கள் நுகர்வோர் திட்டத்தை சிறப்பாக தாக்கல் செய்கிறார்கள். ஒருவர் எடுக்கும் ஒரு நல்ல திட்டம் அது. அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் கடன் நிவாரணம் பெற முடியும். அனைத்து கடன்களையும் செலுத்திய பிறகு ஒருவர் தங்கள் கடன் மதிப்பெண்ணை அதிகரிக்க முடியும்.
உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணை நன்றாகப் பராமரிக்கவும்
கடன் அட்டைகளுக்குரிய மாதாந்த கட்டணங்;களை சரியான நேரத்தில் செலுத்தத் தொடங்க கடன் தொகையை செலுத்திய பிறகு. கிரெடிட் மதிப்பெண் ஒருபோதும் எதிர்மறைக்குச் செல்லாது. மேலும் வங்கி தங்கள் நுகர்வோரை எளிதில் நம்புவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு .
உங்களிடம் கடன் அல்லது கடன் சிக்கல்கள் இருந்தால் www.gtacredit.com ஐப் பார்வையிடவும் அல்லது 416 650 1100 ஐ அழைக்கவும்