மலேசிய மாணவர்களின் நாவன்மை நிகழ்ச்சியில் கனடா கவிஞர் குமரகுரு புகழாரம்
நாவன்மை மிக்க மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவார்கள். சிறந்த கல்வியாளர்களாக, தலைவர்களாக சமூகம் மதிக்கும் நற்பிரஜைகளாக மிளிர்வார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இதையே நாம் கடந்த கால வரலாற்றில் கண்டு வந்துள்ளோம். அதைப்போன்று இன்று இங்கு உரையாற்றிய மாணவர்கள் நிரூபித்துள்ளனர் என்று கனடா வாழ் கவிஞரும் கனடா கவிஞர் கழகத்தின் பொருளாராருமான திரு.க.குமரகுரு தெரிவித்தார்.
கனடா உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் மாதம் ஓரு தடைவ மலேசியா மாணவர்களின் நாவன்மை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பெற்று வரும் நாவன்மை நிகழ்ச்சி கடந்த 30-01-2022 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று இணையவழி மூலம் நடைபெற்றுது.
மேற்படி நிகழ்ச்சியை மலேசியா ஆசிரியை திருமதி சரளா சுப்பிரமணியம் தொகுத்து வழங்கினார். பாடகரும் மலேசிய வர்த்தகருமான ரவாங் ராஜா அவர்கள் இந்த நிகழ்ச்சியின்
தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். ஏன். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார்.
கடந்த 30ஆம் திகதி இணையவழியில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போதே திரு குமரகுரு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது கனடா உதயன் வாரப் பத்திரிகை நடத்தும் அரங்கம் எட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு உதயன் வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. உதயன் பத்திரிகையின் 25ஆவது வெள்ளிவிழாவையொட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாவன்மை நிகழ்ச்சி என்பது குறிப்பித்தக்கது.
இந்த நாவன்மை நிகழ்வில் மலேசியாவில் உள்ள அரச தோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பேசினர். மலேசியாவின் ஐந்து மாகாணங்களில் உள்ள ஐந்து பாடசாலைகளில் இருந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.குமரகுரு அவர்கள் தொடர்ந்து உரையாற்றும்போது தமிழ் என்ற ஒற்றைச் சொல் இன்று எம் அனைவரையும் இணைத்துள்ளது. || யாதும் ஊரே|| என்னும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு அமைய நாம் அனைவரும் இணைந்துள்ளோம். இது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் இன்றைய நாவன்மை நிகழ்வின் கருப்பொருள் | மனித நேயம் | ஆகும். பங்கேற்றிய ஐவரும் மனிதநேயம் என்றால் என்ன? அதை நாம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டினீர்கள். அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, அப்துல் கலாம் ஐயா, அண்ணல் காந்தி ஆகியோரை எடுத்துக் காட்டினீர்கள். அனைவரையும் பாராட்டுகின்றேன் என்றார். மேலும் மனனம் செய்யும் பயிற்சியாளர் சிறந்த பேச்சாளர்களாவது மட்டுமன்றி ஏனைய பாடங்களிலும் சிறந்து விளங்க முடியும் என்றார். மேலும் சிறந்த உச்சரிப்பு ஏற்ற இறக்கத்துடன் அமைந்த பேச்சானது பாராட்டப்பட வேண்டியது. சகல மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், பெற்றோரையும் பாராட்டினார்.
மேலும் மனிதநேயம் தலைப்பானது, இந்த நிகழ்ச்சியின் தலைவர், நிகழ்ச்சியின் கர்த்தா, உதயன் வாரஇதழ் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவர் பல நிகழ்வுகளின் மூலம் தனது மனிதாபிமானத்தை வெளிக்காட்டியவர், தொடர்ந்து செய்து வருபவர்.
கனடாவுக்கு வரும் படைப்பிலக்கிய வாதிகள், பிரமுகர்கள், கலைஞர்கள் என பலதரப்பட்டவர்களை வரவேற்று, உபசரித்து உறைவிடமும் வழங்குவார். இறுதியில் விழாவெடுத்து பரிசும் வழங்கிக் கௌரவிப்பார். வருடாவரும் நடத்தும் || உதயன் விருது விழா || மூலம் கனடாவிலும், இலங்கை, தமிழகம் உட்பட பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் பன்முக ஆளுமைகளுக்கும் விருது வழங்கி கௌரவித்து மகிழ்பவர்.
மேலும் தனது மனிதநேய அமைப்பின் ஊடாக இலங்கையில் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் பல அரிய பணிகளைச் செய்துவரும் ஒரு சிறந்த மனிதாபிமானி என்று குறிப்பிட்டார். மேலும் எண்ணிய எண்ணியாங்கு என்னும் குறளுக்கேற்ப தான் நினைப்பதை நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆளுமைமிக்கவர் என்று குறிப்பிட்டார்.
மேலும் இன்று தமிழ்மொழி எல்லாத்துறைகளிலும் மிளிர்கின்றது. தமிழை கற்பதால் என்ன பயன் என்று கேட்ட காலம் மாற தமிழ் தெரிந்தால் கூகுள் நிறுவனத்திலும் பணி கிடைக்கும் என்பது என்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. எனவே மாணவர்களே முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். வள்ளுவர் கூற்றுக்கமைய ஷமுயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்| அதாவது முயற்சி உடமையானது செல்வ வளத்தை ஆக்கி வைக்கும். முயற்சி இல்லாவிட்டால் அது துன்பத்தையே தரும் என்பதே முயற்சி செய்யுங்கள். திருமகள் எப்போதும் உடன் இருப்பாள் என்று கூறினார்.
மேலும் ஷயாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிமையானது எங்கும் காணோம்| என்ற மகாகவி பாரதியின் வரிகளைக் கூறி இனிய தமிழ்மொழியைப் பிழையின்றிக் கற்கவேண்டும். என்று அனைத்து மாணவர்களையும் பாராட்டியதுடன், இந்த நிகழ்வை கடல் கடந்து கனடாவுக்கு வெளியே நடத்தும் உதயன் வார இதழ் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களையும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பார்வையாளராக பங்குபற்றிய | சிந்தனைப் பூக்கள்| எஸ்.பத்மநாதன் அவர்களது பங்குபற்றி சிறப்பான கருத்துக்களைக் கூறி நிகழ்ச்சியை மேலும் மெரு மேலும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளராகவும், இணைய ஒருங்கிணைப்பாளராகவும் பாடகர் திரு.ராஜா அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.