(20-05-2022)
தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட லிட்ரோ நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கப்பல் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.