தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கமானது கனேடியத் தமிழ்ச் சங்கத்துடன் தமிழ்மொழி கற்றல் கற்பிப்பதன்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளனர். ஒப்பந்ததில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந. பஞ்சநதம் அவர்களும் கனேடியத் தமிழ்ச்சங்க நிறுவுனர் . சு. இராசரத்தினம் அவர்களும் கையொப்பம் இட்டனர்.
இங்கே காணப்படும் படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பெற்றவையாகும். தற்போது தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள சு. இராஜரத்தினம் அவர்கள் அங்கு தமிழ் மொழி தொடர்பான பல கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.