இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்காட்சி மோஷன் பதாகையை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டனர். ‘டியர்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ‘டியர்’ படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.