இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஆமர் வீதி சந்திக்கு அருகில் ‘அம்பாள் கபே’ என்னும் உயரிய தென்னிந்திய உணவகத்தை வெற்றிகரமாக நடத்திய திரு கணபதி நாராயண| சுவாமி நாயக்கர் அவர்கள் நேற்று 08-09-2020 அன்று இந்தியாவில் காலமானார். அவருக்கு வயது 90
ஒரு இந்திய கிராமத்து சிறுவன்தனது உழைப்பால்கொழும்பின் ஒரு முக்கியமான தொழிலதிபராக உயர்ந்தது ஒரு சாதாரண நிகழ்வல்ல. கடும்முயற்சி, தன்நம்பிக்கை, தோல்வியை வெற்றியாக மாற்றும் துணிச்சல், இறைநம்பிக்கை, அடுத்தவர்களுக்கு உதவும்குணம் எல்லாம்கலந்தது தான் திருநாராயணசுவாமி அவர்களின் வாழ்க்கைப் பயணம்.
சிறுவயதில் வியாபாரத்துக்குகாக குடும்பத்தினருடன்இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். ஒரு மேசைதுடைக்கும் பையனாக இருந்த அதே உணவகத்தின் உரிமையாளராக உயர்ந்தார். அறுபதுகளிலும், எழுபதுகளிலும் கொழும்பின் தவிர்க்கமுடியாத ஒருதொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
பின்னாளில் இந்தியாவிலும் தனது நிறுவனத்தின் கிளைகளை நிறுவினார். இவரிடம் வேலை செய்தும், நட்பு பெற்றும், படிப்பு உதவி பெற்றும் உயர்ந்தோர்பலர் இன்று இலங்கை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்லநிலைமையில் உள்ளனர். தானும் உயர்ந்து அடுத்தவர்களையும் உயர்த்தும் பண்பு கொண்டோர்களால்தான்மனிதாபிமானமும், மனிதர்களின்மீதான நம்பிக்கையும்இன்னும் இவ்வுலகில்தொடர்கிறது.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
– குறள்
ஒருவருக்கு ஒரு நன்மையையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக்கை மாறாக மண்ணுலகையும் விண்னுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது