20வது திருத்தச் சட்டத்தின் மூலம் தேசி கொள்முதல் ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காளர் சேவை ஆணைக்குழு என்பனவற்றை நீக்கியமை பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது என பாராளுமன்ற உறுப்பினர எரான் விக்ரமரத்ன கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்முதல் ஆணைக்குழு தேசிய கணக்காளர் சேவை ஆணைக்குழு என்பவற்றை அகற்றியுள்ளனர். ஏனைய ஆணைக்குழுக்கள் உண்டு. ஆனால் அதன் நியமினங்கள் சுயாதீனமாக அமையாது. 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியே அனைத்து நியமனங்களையும் செய்வார்.
எல்லாவற்றையும் ஜனாதிபதியே செய்வார். பொருட்கள் வாங்குவதும் நிறைவேற்று அதிகாரி பொருட்கள் திருடுவதும் நிறைவேற்று அதிகாரி பொருட்கள் திருட்டுப்போனதை கண்டுபிடிப்பதும் நிறைவேற்று அதிகாரி. இதுதான் 20வது திருத்தத்தின் மூலம் நடக்கும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எரான் மேலும் கூறினார்.