திறமையாக வேலை செய்யக்கூடிய ஜனாதிபதிக்கு அதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் நோக்கமாக 19வது திருத்தத்தை நீக்கி 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதென யாப்பு திருத்த பிரதானி நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாம் வந்திருப்பது வேலை செய்யவே தவிற புதிய புத்தகங்கள் எழுதி மாற்றச் செய்ய அல்ல. 19வது திருத்தத்தை தூக்கிக் கொண்டு வந்தனர். நாம் அதனை இரத்து செய்துள்ளோம். ஏன் இரத்து செய்தோம்?
வேலை செய்யும் ஜனாதிபதிக்கு வேலை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பத்காகும்.. 19வது திருத்தத்தில் பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கி அதற்கு அதிகாரம் கொடுத்தனர். அதன்மூலம் குற்றங்கள் குறையும் என எதிர்பார்த்தோம். அப்படித்தானே?
2015இல் குடு சோதனை செய்ய 6700 பேர் வந்தனர். அது 2016இல் 7900 ஆகவும் 2017இல் 11100 ஆகவும் 2018இல் 12000 ஆகவும் 209இல் 16000 ஆகவும் காணப்பட்டது. இவ்வருடம் 14000 ஆக உள்ளது. ஆணைக்குழு இருந்தும் பயனில்லை. குற்றச்சாட்டுக்கள் குறையவில்லை.
அதனால் தான் நாம் ஆணைக்குழு போதும் என நினைத்தோம். அறிக்கை தயாரித்து அனுப்பி வைத்து பயனில்லை. என அலி சப்ரி தெரிவித்தார்.