(மன்னார் நிருபர்)
15-07-2021
மன்னார் பிரதேச செயலக பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கான ஒரு தொகுதி உதவி பொருட்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பைஸர் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இடம் பெற்று வருகின்ற நிலையில் அங்கே பணிபுரிகின்ற தொண்டர்கள் மற்றும் ஊசி செலுத்திக் கொள்ளுகின்ற மக்களுக்கு பயன்படுத்துவதற்கு என ஒரு இலட்சம் ரூபாய் பொருமதியான பொருட்கள் இன்று பிரதேச செயலாளர் ம. பிரதீப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேசிடா நிறுவன ஊழியர்கள்,பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.